வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் பாதயாத்திரையில் பயணிக்கும் கானகப் பாதையின் முதல் தங்குமிடமாக விளங்கும் கிணற்றடி அல்லது வாகூரவட்டை எனுமிடத்தில் பாதயாத்திரீகர்களுக்கு பழரசம், பிஸ்கட் ,தேனீர் மற்றும் வெற்றிலை பாக்கு போன்ற பண்டங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
பிரபல சமூக செயற்பாட்டாளர் கே.ஜெயசிறில் மற்றும் சமூக ஆர்வலர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோரின் ஒருங்கிணைப்பில் இந்த உதவி யாத்திரீகர்களுக்கு வழங்கப்பட்டது.
புலம்பெயர்ந்த ஜெர்மன் விஜயகலா சந்திரகுமார், சுவிஸ் விஜயகுமாரி மகேஸ்வரன், ஜெர்மன் காந்தன், கனடா லிங்கன், உதயன் ஆகியோரின் நிதி அனுசரணையில் இது வழங்கப்பட்டிருக்கின்றது .
தொடர்ந்து குமுக்கன் நதி தீரத்திலும் இந்த உதவி வழங்கப்பட்டது.
0 comments :
Post a Comment