வாகூரவட்டையில் கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு ஜீவ சேவை!



வி.ரி. சகாதேவராஜா-
ரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் பாதயாத்திரையில் பயணிக்கும் கானகப் பாதையின் முதல் தங்குமிடமாக விளங்கும் கிணற்றடி அல்லது வாகூரவட்டை எனுமிடத்தில் பாதயாத்திரீகர்களுக்கு பழரசம், பிஸ்கட் ,தேனீர் மற்றும் வெற்றிலை பாக்கு போன்ற பண்டங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

பிரபல சமூக செயற்பாட்டாளர் கே.ஜெயசிறில் மற்றும் சமூக ஆர்வலர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோரின் ஒருங்கிணைப்பில் இந்த உதவி யாத்திரீகர்களுக்கு வழங்கப்பட்டது.

புலம்பெயர்ந்த ஜெர்மன் விஜயகலா சந்திரகுமார், சுவிஸ் விஜயகுமாரி மகேஸ்வரன், ஜெர்மன் காந்தன், கனடா லிங்கன், உதயன் ஆகியோரின் நிதி அனுசரணையில் இது வழங்கப்பட்டிருக்கின்றது .

தொடர்ந்து குமுக்கன் நதி தீரத்திலும் இந்த உதவி வழங்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :