சாய்ந்தமருது பிரதேசக் கடற்கரையோரத்தில் அதிகளவில் ஆழ்கடல் மீனவர்களால் பிடிக்கப்பட்ட கெலவல்லா (Kelawalla) , வலயா (Balaya) போன்ற மீன்கள் மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டது.
வலயா(Balaya) ஒரு கிலோ 400 ரூபாய் தொடக்கம் 500 ரூபாய் வரையும் ,கெலவல்லா (Kelawalla) ஒரு கிலோ 1,000 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது.
ஆழ்கடல் மீன்பிடிக்குச் செல்பவர்கள் இந்த இடத்தில் மீன்களை எடுத்து வந்து இவ்வாறு மிகக்குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றனர்.
அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சிங்கள, தமிழ் சகோதர இன மக்கள் குடும்பத்தோடு இந்த இடத்திற்கு அதிகாலை நேரத்திலேயே வருகை தந்து மீன்களை கொள்வனவு செய்து வருகின்றனர்.
0 comments :
Post a Comment