யூ.எஸ்.எப். ஸ்ரீலங்கா அமைப்பு நடத்திய “உதிரம் கொடுத்து உயிர் காப்போம்” இரத்ததான முகாம்



நூருல் ஹுதா உமர்-
யூ.எஸ்.எப். ஸ்ரீலங்கா அமைப்பின் 09 வது ஆண்டை முன்னிட்டு கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் நிலவும் இரத்தப்பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யுமுகமாக மயோன் எடியுகேசன் எயிட் பூரண அனுசரனையுடன் “உதிரம் கொடுத்து உயிர் காப்போம்” எனும் தொனிப்பொருளில் இரத்தான முகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் 112 பேர்கள் இரத்ததானம் வழங்கியதுடன் நிகழ்வில் பிரதம அதிதியாக மயோன் குரூப் ஆப் கம்பெனி நிறுவனத்தின் பணிப்பாளரும் மயோன் எடியுகேசன் எயிட் தலைவருமான பிரபல சமூக சேவையாளர் றிஸ்லி முஸ்தபா கலந்து கொண்டார்.

மேலும் விசேட அதிதிகளாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் டாக்டர் சஹீலா இஸ்ஸதீன், அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம். எப். ரஹ்மான், சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தின் பொறுப்பதிகாரி, அமைப்பின் போசகர்கள், ஆலோசகர்கள் மற்றும் அமைப்பின் செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்..
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :