புதிய கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.எம்.தாஹிர் வரவேற்பு!



எச்.எம்.எம்.பர்ஸான்-
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகத்திற்கு இன்று புதன்கிழமை (17) தனது கடமையினை பொறுப்பேற்றுக் கொண்ட புதிய கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.எம்.தாஹிரை வரவேற்கும் நிகழ்வு இடம்பெற்றது.

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி அதிபர் சங்கம் ஏற்பாடு செய்த இந்நிகழ்வு, அதிபர் சங்க தலைவர் என்.சஹாப்தீன் தலைமையில் இடம்பெற்றது.

வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் அதிபராக பணிபுரிந்து வந்த புதிய கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.எம்.தாஹிர் சேவை மூப்பு அடிப்படையில் இலங்கை கல்வி நிருவாக சேவை பரீட்சையில் சித்தியடைந்து அண்மையில் உதவிக் கல்விப் பணிப்பாளராக நியமனம் பெற்றிருந்தார்.

அந்தவகையில், கடமையினை பொறுப்பேற்றுக் கொண்ட புதிய கோட்டக் கல்விப் பணிப்பாளரை வரவேற்கும் இந்நிகழ்வில், பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள், மட்டக்களப்பு மத்தி ஆசிரிய ஆலோசகர்களான எம்.பி.ரீ.கான், எஸ்.எம்.கடாபி, எச்.எம்.ஆதம் லெப்பை ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :