நாவிதன்வெளியில் “சாதனையாளர்களை கெளரவிக்கும் முப்பெரும் விழா” ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதி



ம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேசத்தின் “சாதனையாளர்களை கெளரவிக்கும் முப்பெரும் விழா” நேற்று (20) மாலை அமீர் அலி பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டார். இதன் போது நாவிதன்வெளி பிரதேசத்தில் 2023ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களுக்கு கெளரவம் வழங்கிவைக்கப்பட்டதுடன் தெரிவு செய்யப்பட்ட பெண்களுக்கான வாழ்வாதார திட்டங்களும் வழங்கிவைக்கப்பட்டது.

அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளர் ரிஸ்லி முஸ்தபா அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நாவிதன்வெளி பிரதேச அமைப்பாளர் ஏ.எம் மெளரூப், கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளர் தாஹீர், கட்சியின் பிரதி செயலளார் சட்டத்தரணி. அன்ஸில், அம்பாறை மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளர் சட்டத்தரணி ரிபாஸ், கட்சியின் மாவட்ட செயற்குழு செயலாளர் காதர் , முன்னாள் பிரதேச உறுப்பினர்களான மனாப், முபீத்,கட்சியின் மருதமுனைபிரதேச அமைப்பாளர் YK ரஹ்மான், கட்சியின் அட்டாளைச்சேனை பிரதேச அமைப்பாளர் அமீர் , உயர்பீட உறுப்பினர் ஜுனைதீன் மான்குட்டி உள்ளிட்டவர்களுடன் ஊரின் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இந் நிகாழ்வோடு, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் சுபையிர் மக்கள் காங்கிரஸுடன் உத்தியோகபூர்வமாக இணைந்துகொண்டார்.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :