2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின்படி, எந்தவொரு தேர்தலையும் நடத்துவதற்கு 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அரசாங்கம் கடுமையான நிதி முகாமைத்துவத்துடன் செயற்படுவதால், அந்தப் பணத்தை வழங்குவதில் எந்தத் தடையும் இல்லை என்றும் அமைச்சர் கூறினார். தபால், அச்சிடுதல் மற்றும் பாதுகாப்புக்கான செலவுகளை வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும், தேவைக்கு ஏற்ப உரிய பணத்தை விடுவிக்க முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்ததாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். நிதி அமைச்சின் செயலாளர் திரு.மகிந்த சிறிவர்தன மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியதுடன் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான பண ஒதுக்கீடு உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
Home
/
LATEST NEWS
/
Slider
/
செய்திகள்
/
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தேவைக்கு ஏற்ப தேர்தலுக்கு நிதி ஒதுக்குவதற்கு நிதியமைச்சு தயார்.- அமைச்சர் சியம்பலாபிட்டிய
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment