புத்தளம் எழுச்சி மாநாட்டில், அகில இலங்கை மக்கள் காங்கிரசுடன் இணையும் சாய்ந்தமருது சலீம்?



முன்னாள் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம் தேசிய காங்கிரஸ் கட்சியில் இருந்து அகில இலங்கை மக்கள் காங்கிரசுடன் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அம்பாரை மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று (26) கல்முனையில் இடம்பெற்றது.
இதன்போது கடந்த காலங்களில் தேசிய காங்கிரசில் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்து வந்த சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த முன்னாள் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியோடு இணைந்து கொள்வதற்கான முனைப்புடன் அம்பாரை மாவட்ட செயற்குழுவுடன் சினேகபூர்வ சந்திப்பில் ஈடுபட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து இன்று புத்தளம் பிரதேசத்தில் இடம்பெறவுள்ள புத்தளம் எழுச்சி மாநாட்டில் வைத்து கட்சியோடு உத்தியோகபூர்வமாக இணைந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது
முன்னர் இவர் கட்ந்த பொது தேர்தலில் தேசிய காங்கிரஸ் கட்சியில் குதிரை சின்னத்தில் போட்டியிட்ட மை குறிப்பிடத்தக்கது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :