முஷாரப் MP யின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் சாய்ந்தமருதில் இரண்டு மகளிர் அமைப்புகளுக்கு காரியாலய தளபாடங்கள்!



ம்பாறை மாவட்டத்தில் கடந்த காலங்களில் பன்முகப்படுத்தப்பட்ட நிதியினூடாக குறிப்பிட்டவர்களே பயன்பெற்றுக்கொண்டிருந்த யுகம் மாறி, முன்னாள் இராஜாங்க அமைச்சரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம்.எம். முஷாரப் முதுநபீனது அரசியல் பிரவேசத்தின் பின்னர் மாவட்டமெங்கும் தேவையுடைய மக்களையும் அமைப்புக்களையும் தேடித்தேடி பங்கிடும் நிலை உருவாகியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் முதுநபீனின் சாய்ந்தமருது மற்றும் மாவடிப்பள்ளி பிரதேச இணைப்பாளரான அஸாம் அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.

அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால், முன்னாள் இராஜாங்க அமைச்சரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம்.எம். முஷாரப் முதுநபீனுக்கு வழங்கப்பட்ட விஷேட தியொதுக்கீட்டில் இருந்து, சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பாடசாலைகள், சமூகசேவை அமைப்புக்கள் மற்றும் விளையாட்டுக்கழகங்கள் போன்றவற்ரின் அவசர தேவைகளுக்கு வேண்டிய பொருட்களை வழங்கிவைக்கும் நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்திலும் கலாச்சார மண்டபத்திலும் இடம்பெற்றிருந்தது.

இரண்டாம் கட்டமாக இன்னும் ஒரு தொகுதி பெண்கள் அமைப்புகளுக்கு அலுவலக தளபாடங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே இணைப்பாளரான அஸாம் அப்துல் அஸீஸ் மேற்படி குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் முஷாரபிடம் அம்பாறை மாவட்டத்தின் ஒவ்வொரு பிரதேச மக்களின் தேவைகள் தொடர்பான விரிவான திட்டங்கள் இருப்பதாகவும் அவைகள் கட்டம் கட்டமாக நிறைவேற்றிக் கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அலுவலக தளபாடங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வின்போது சாய்ந்தமருது பிரதேச செயலக கணக்காளர் மற்றும் பிரதி திட்டமிடல் உத்தியோகத்தர் கே.எல்.எம். ஹமீட் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

 







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :