அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால், முன்னாள் இராஜாங்க அமைச்சரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம்.எம். முஷாரப் முதுநபீனுக்கு வழங்கப்பட்ட விஷேட தியொதுக்கீட்டில் இருந்து, சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பாடசாலைகள், சமூகசேவை அமைப்புக்கள் மற்றும் விளையாட்டுக்கழகங்கள் போன்றவற்ரின் அவசர தேவைகளுக்கு வேண்டிய பொருட்களை வழங்கிவைக்கும் நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்திலும் கலாச்சார மண்டபத்திலும் இடம்பெற்றிருந்தது.
இரண்டாம் கட்டமாக இன்னும் ஒரு தொகுதி பெண்கள் அமைப்புகளுக்கு அலுவலக தளபாடங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே இணைப்பாளரான அஸாம் அப்துல் அஸீஸ் மேற்படி குறிப்பிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் முஷாரபிடம் அம்பாறை மாவட்டத்தின் ஒவ்வொரு பிரதேச மக்களின் தேவைகள் தொடர்பான விரிவான திட்டங்கள் இருப்பதாகவும் அவைகள் கட்டம் கட்டமாக நிறைவேற்றிக் கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அலுவலக தளபாடங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வின்போது சாய்ந்தமருது பிரதேச செயலக கணக்காளர் மற்றும் பிரதி திட்டமிடல் உத்தியோகத்தர் கே.எல்.எம். ஹமீட் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment