அஸீஸா பௌண்டேன் ஏற்பாட்டில்... ஏறாவூரில் 200 குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கிவைப்பு



றாவூர் மஸ்ஜிதுல் நூருள் நிஷா மஹல்லாவை சேர்ந்த குறைந்த வருமானம் பெறும் பெண் தலைமைதாங்கும் 200 குடும்பங்களுக்கு அஸீஸா பௌண்டேஷன் உதவியுடன் நேற்று (15) உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.

அஸீஸா பௌண்டேன் பணிப்பாளர் சாதிக் ஹசனிடம் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.சுபைர் விடுத்த வேண்டுகோளின் பிரகாரம் குறித்த உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.சுபைர், அஸீஸா பௌண்டேன் பணிப்பாளர் சாதிக் ஹசற், செக்டோ ஸ்ரீலங்கா நிறுவனத்தின் தலைவரும் சட்டத்தரணியுமான ஏ.எல்.நியாஸ், ஏறாவூர் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் கபூர்தீன், றகுமா சமூக சேவை நற்பணி மன்றத்தின் தலைவர் அகீல் அஹமத் உட்பட பள்ளிவாசல் நிர்வாகத்தினரும் இந்நிகழ்வில்
கலந்துகொண்டு குறித்த உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தனர்.

ஏறாவூர் பிரதேசத்திலுள்ள குறைந்த வருமானம் பெறும் பெண் தலைமைதாங்கும் குடும்பங்களுக்கு ஒவ்வொரு வருடமும் அஸீஸா பௌண்டேஷன் உலர் உணவுப் பொதிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :