30 வருட தாதிய சேவையை பூர்த்தி செய்த சிவநாதனுக்கு பாராட்டு விழா!



வி.ரி. சகாதேவராஜா-
ல்முனை ஆதார வைத்தியசாலையில் 30 வருட தாதிய சேவையைப் பூர்த்தி செய்து ஓய்வு பெறும் காரைதீவைச் சேர்ந்த தாதிய உத்தியோகத்தர் கந்தசாமி சிவநாதனுக்கு நேற்று பிரியாவிடை நிகழ்வு வைத்தியசாலையில் நடந்தது .

வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் ரங்கே சந்திரசேன தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் எம். சமீம் நிருவாக உத்தியோகத்தர் ரி.தேவஅருள் தாதியபரிபாலகர் ரி.சசீந்திரன் உள்ளிட்ட பலரும் பாராட்டி உரையாற்றினார்கள்.

திரு. சிவநாதன் கடந்த முப்பது வருட காலமாக பல பிரிவுகளில் கடமையாற்றி இறுதியாக சத்திர சிகிச்சை பிரிவில் பொறுப்பு தாதிய உத்தியோகத்தராக சேவை ஆற்றியதை ஒட்டி அவருக்கு பொன்னாடை போர்த்தி பரிசுகளும் வழங்கப்பட்டன.
வைத்தியசாலை ஊழியர்கள் நிகழ்வில் கலந்து பாராட்டினர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :