நிந்தவூர் பிரதான வீதியிலுள்ள பஸ் பிரயாணிகள் தரிக்கும் இடத்திற்கு அருகில் கொட்டப்பட்டுள்ள திண்மக்கழிவுகளால் பிரயாணிகளுக்கு சிரமம்



அஸ்ஹர் இப்றாஹிம்-
நிந்தவூர்- காரைதீவு பிரதான வீதியில் அமையப்பெற்றுள்ள பஸ் பயணிகள் தரிக்கும் இடத்திற்கு சுற்றுப்புறம் குப்பைகள் கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசுவதாக பிரயாணிகள் விஷனம் தெரிவிக்கின்றனர்.

பஸ் பயணிகள் தரிக்கும் இடத்திற்கு உள்புறமாவும் குப்பைகள் காணப்படுவதாலும் துர்நாற்றம் வீசுவதாலும் பிரயாணிகள் அந்த இடத்தில் தரிக்காமல் சற்று தள்ளி நின்றே பஸ்களில் பயணிக்க வேண்டியுள்ளது.

பல மாதங்களாக அகற்றப்படாத இந்த திண்மக் கழிவுகளை காகம்,ஆடு, மாடு போன்றவை கிளறுவதால் துர்நாற்றம் மேலும் அதிகரிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :