பல்கலைக்கழக மாணவ தூதுவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கலும் சிறுவர் பாதுகாப்பு குறித்த பயிற்சியும்!



தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினால் பல்கலைக்கழக மாணவ தூதுவர்களுக்கான (University Student Ambassador) நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வும் சிறுவர் பாதுகாப்பு குறித்த பயிற்சி பட்டறையும் தென்கிழக்கு பல்கலைக்கழக கலை கலாச்சார பீட கேட்போர்கூடத்தில் 2024.08.22 ஆம் திகதி இடம்பெற்றது.

தென்கிழக்கு பல்கலைக்கழக பாலின சமத்துவம் மற்றும் சமத்துவத்திற்கான நிலையத்தின் தலைவியும் மாணவ தூதுவர்களுக்கான தேசிய வேலைத்திட்டத்தின் தென்கிழக்கு பல்கலைக்கழக இணைப்பாளரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான ஏ.டபிள்யூ .என். நளீபாவின் தலைமையில் இடம்பெற்ற இன் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பதில் உபவேந்தர் கலாநிதி யூ.எல் அப்துல் மஜீட் கலந்து கொண்டார்.

நிகழ்வில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் சார்பில் பணிப்பாளர் சானிக மலல்கொட, அதிகாரசபையின் உதவிப் பணிப்பாளர் திருமதி லக்ஷிகா மாணிக்போவ, ஊடக சி.டி மற்றும் தகவல் உத்தியோகத்தர். தனுஷ்க சேனாரத்ன, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் போன்றோர் பங்கு கொண்டனர்.

நிகழ்வில் சிரேஷ்ட பேராசிரியர் எம்.ஐ.எம்.கலில், சமூகவியல் துறைத்தலைவர் பேராசிரியர் எஸ்.எம். ஐயூப், புவியல் துறை தலைவர் கே. நிஜாமிர் உள்ளிட்ட விரிவுரையாளர்கள் மற்றும் சிரேஷ்ட உதவி பதிவாளர் எம்.ரீ. அஷ்ஹர், மாணவ தூதுவர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

















 





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :