சஜித் பிரேமதாச நாற்பதாண்டுகளின் பின்னர் இந்த நாட்டின் அனைத்து இனங்களையும் ஒன்றிணைக்கும் ஜனாதிபதியாக வருவார் - வே.இராதாகிருஷ்ணன் தெரிவிப்பு



க.கிஷாந்தன்-
ஜித் பிரேமதாச நாற்பதாண்டுகளின் பின்னர் இந்த நாட்டின் அனைத்து இனங்களையும் ஒன்றிணைக்கும் ஜனாதிபதியாக வருவார் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இன்று (17ஆம் திகதி) ஹட்டனில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்த போதே வேலுசாமி இராதாகிருஷ்ணன் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

நாட்டில் இனவாதத்தையும் சாதியவாதத்தையும் விதைத்து முன்னாள் ஜனாதிபதிகள் ஆட்சியில் இருந்ததாகவும், 40 வருடங்களின் பின்னர் சஜித் பிரேமதாசவே இந்த நாட்டில் அனைத்து இனங்களையும் ஒன்றிணைத்து நாட்டை அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச் செல்லும் ஒரேயொரு ஜனாதிபதி வேட்பாளர் எனவும் தெரிவித்தார்.

இன்று ரணிலுக்கு ஆதரவாக இணைவோருக்கு மதுபான விற்பனை உரிமம் மற்றும் பணம் வழங்கப்படுவதாக ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.

அத்துடன், ஒரு மதுபான அனுமதிப்பத்திரத்தின் பெறுமதி சுமார் ஐந்து கோடி ரூபா எனவும், ஜனாதிபதியைச் சுற்றி திரண்டுள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ளனர்.

சஜித் பிரேமதாச இந்த நாட்டில் 50% க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர், தற்போதைய ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து வழங்கப்பட்ட அனைத்து மதுபான அனுமதிப் பத்திரங்களையும் ரத்து செய்யவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாசவைச் சுற்றி திரண்டிருக்கும் மக்கள் இந்த நாட்டின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்பும் பணிக்காக ஒன்றுபட்டுள்ளதாகவும், அந்தக் குழுவினருக்கு எதிராக எவ்வித குற்றச்சாட்டுக்களும் இல்லை எனவும் தெரிவித்தார்.



பெருந்தோட்ட மக்கள் இம்முறை சஜித் பிரேமதாசவுக்கு வாக்களிக்க தயாராக உள்ளதாகவும், அந்த மக்களை யாராலும் ஏமாற்ற முடியாது எனவும் இதன்போது வே.இராதாகிருஷ்ணன் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :