ஓட்டமாவடி - மீராவோடை சிறுவன் விபத்தில் பலி!



எச்.எம்.எம்.பர்ஸான்-
வாகன விபத்தில் சிறுவன் ஒருவன் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் இன்று சனிக்கிழமை (17) மாலை பனிச்சங்கேணிப் பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளது.

வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிச்சங்கேணி பகுதிக்கு தாயுடன் ஆட்டோவில் சென்ற சிறுவன் ஒருவனே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

ஆட்டோ வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது சிறுவன் வீதியை குறுக்கறுக்கும் போது அவ் வீதியால் வந்த வேனில் சிறுவன் மோதுண்டு சம்பவ இடத்திலே மரணமடைந்துள்ளார்.

மரணமடைந்த சிறுவன் ஓட்டமாவடி - மீராவோடை எல்லை குறுக்கு வீதியைச் சேர்ந்த எட்டு வயதுடைய மஹ்தி என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மரணமடைந்த சிறுவனின் உடல் வாகரை வைத்தியசாலையில் வைக்கப்பட்டு, பின்னர் வைத்திய பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

விபத்தை ஏற்படுத்திவிட்டு வேன் சாரதி வேனை நிறுத்தாமல் சென்றுள்ளதாக விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
குறித்தை விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :