பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார நலன்கள் தொடர்பான பரிசோதனைகள் முன்னெடுப்பு !



நூருல் ஹுதா உமர்
ல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையும் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் இணைந்து கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) தரம் 06, 07 மற்றும் 10 பிரிவுகளின் உள்ள மாணவிகளுக்கு சுகாதார நலன்கள் தொடர்பான பரிசோதனைகளை கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக மேற்பார்வை சுகாதார பரிசோதகர் ஏ.எம்.பாறூக் தலைமையில் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹ்துல் நஜீம், இந்த கல்லூரியின் பழைய மாணவியும் பிரபல மனநல மருத்துவரும் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரியுமான எஸ்.எப். டாக்டர் ஸஹ்ரா சரப்தீன், டாக்டர். ஏ. ஆர். எம் அஸ்மி, கல்லூரி முதல்வர் ஏ.பி. நஸ்மியா சனூஸ், பிரதி அதிபர் என்.டி நதீகா, பகுதித் தலைவிகள், தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் உத்தியோகத்தர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், ஆசிரியர்கள், மாணவிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :