கல்முனையை நோக்கி பயணித்த சம்மாந்துறை விவசாயி சாய்ந்தமருது பிரதான வீதியில் கனரக வாகனத்தில் மோதி பலி



அஸ்ஹர் இப்றாஹிம்-
ல்முனையை நோக்கி பயணித்த விவசாயியொருவர் சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலயத்திற்கு முன்பாக கனரக வாகனமொன்றில் மோதுண்டு பலியாகியுள்ளார். இச் சம்பவம் புதன் கிழமை (14) காலை இடம்பெற்றது.

கல்முனை பிரதான வீதியில் இடம்பெற்ற இவ்விபத்தில் உயிரிழந்தவர் சம்மாந்துறை கைகாட்டி, கல்லரிச்சல் பிரதேசத்தைச் சேர்ந்த முஹம்மட் றமீஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார் தனது வயலில் சிறுபோக வேளாண்மை அறுவடை இடம்பெறுவதால் நெல்லை உலர்த்துவதற்காக படங்குகளைப் பெறுவதற்காக கல்முனைக்கு செல்லும் வழியிலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக சாய்ந்தமருது பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :