முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட செயற்குழு கூடுகிறது.!



ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட செயற்குழுக் கூட்டம் கட்சியின் தேசிய தலைவர் அல்-ஹாஜ் ரவூப் ஹக்கீம் தலைமையில் 2024.08.11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி.ப 04.00 மணிக்கு அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டு பகுதியில் அமைந்துள்ள சக்கி கூட்ட மண்டபத்தில் இடம்பெறவுள்ளதாக கட்சியின் மாவட்ட செயற்குழு செயலாளரும் உச்சபீட உறுப்பினரும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான ஏ.சி. சமால்டீன் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் கட்சியின் தவிசாளர், செயலாளர் மற்றும் மாவட்டத்தை பிரதிநிதித்தவப்படுத்தும் உச்சபீட உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மாகாண சபை அமைச்சர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் தவிசாளர்கள், பிரதி தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்களும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், பிரதேச அமைப்பாளர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இக்கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.சி. சமால்டீன் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :