நேற்று சிறப்பாக இடம்பெற்ற பாலையடி வாலவிக்னேஸ்வரரின் கொடியேற்றம் ! சுவிஸ் தூண் சிவஸ்ரீ சிவ பிரபாகர குருக்கள் தலைமை.



வி.ரி.சகாதேவராஜா-
ரலாற்றுப்பிரசித்தி பெற்ற காரைதீவு பாலையடி வால விக்னேஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவத்திற்கான கொடியேற்றம் நேற்று 29ஆம் தேதி வியாழக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

முன்னதாக நேற்று வியாழக்கிழமை காலை 7 மணியளவில் காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்திலிருந்து கொடிச்சீலை சம்பிரதாய பூர்வமாககொண்டுவரப்பட்டது.

அங்கு கொடித்தம்ப அபிஷேகம் இடம் பெற்று அரோகரா கோஷம் முழங்க கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.

மஹோற்சவ குருவான சுவிட்சர்லாந்து தூண் ஸ்ரீ வரசக்தி விநாயகர் ஆலய பிரதம குரு கிரியாதிலகம் சிவஸ்ரீ சிவ பிரபாகர குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் கொடியேற்றத்திருவிழாவை சிறப்பாக நடத்தி வைத்தார்கள். திருமதி சிவகுமாரி சிவநாதன் குடும்பத்தினர் கொடியேற்றப்பூஜைக்கு உபயமளித்தனர்.

இதேவேளை செப்டம்பர் 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கண்ணகி அம்மன் ஆலயத்தில் இருந்து பாற்குட பவனி இடம்பெறும். பத்து நாள் தேர்த்திருவிழா உற்சவம் தொடர்ச்சியாக இடம்பெற இருக்கின்றது .

தேரோட்டம் செப்டம்பர் 7ஆம் தேதி சனிக்கிழமை காலை 8 மணிக்கு இடம்பெற இருக்கிறது .மறுநாள் எட்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமை சமுத்திர தீர்த்தோற்சவம் இடம்பெறும் என்று ஆலய பரிபாலன சபைத் தலைவர் இ. தவராஜா தெரிவித்தார் .
வரலாற்றில் முதல் தடவையாக 39 லட்சரூபாவில் பாரிய தேர் ஒன்று ஆலயத்தின் முன்னாள் பிரதம குரு அமரர் சிவஸ்ரீ சண்முரெத்தினம் குருக்கள் குடும்பம் சார்பாக அன்பளிப்பு செய்யப்பட்டிருக்கின்றது . அமரர் சிவஸ்ரீ சண்முகரெத்தினம் குருக்கள் இவ்வாலயத்தில் பல வருடகாலம் பிரதம குருக்களாக நிறைந்த சேவையாற்றியவர் என்பதும் அவரது சிரேஸ்ட புதல்வர் சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் தற்போது இவ் ஆலயத்தின் பிரதம குருவாக இருக்கிறார் . அவர் வடக்கு கிழக்கில் பிரபலமான குருக்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்த தேரின் வெள்ளோட்டம் 6 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை இடம்பெறும். அதேவேளை மறுநாள் 7 ஆம் தேதி சனிக்கிழமை கன்னித் தேரோட்டம் இடம் பெறும்.

உற்சவ காலங்களில் தினமும் காலை 9 மணிக்கு பூஜை வசந்த மண்டப பூஜை மாலை 6 மணிக்கு பூஜை வசந்த மண்டப பூஜை திருவிழா வெளிவீதியுலா மற்றும் மாலை 6:30 மணிக்கு நற்சிந்தனையும் இடம் பெறும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.












இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :