ஆங்கில ஆசிரியர்களுக்கு தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் ELT பயிற்சி பட்டறை!



லங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக கலை கலாச்சார பீடத்தின் ஆங்கில கற்கைகள் திணைக்களம் ஏற்பாடு செய்திருந்த, அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனை, சம்மாந்துறை மற்றும் அக்கரைப்பற்று கல்வி வலயங்களில் ஆங்கில ஆசிரியர்களாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கான ELT பயிற்சி பட்டறை 2024.08.23 ஆம் திகதி பயிற்சி பட்டறையின் இணைப்பாளர் பேராசிரியர் கலாநிதி ஏ.எம்.எம். நவாஸ் தலைமையில் திணைக்களத்தின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.

நிகழ்வை ஆங்கில கற்கைகள் திணைக்களத்தின் தலைவி கலாநிதி எம்.ஐ. பௌசுள் கரீமா ஆரம்பித்து வைத்தார்.

பயிற்சி பட்டறையின் முதல் சுற்றில் Action Research for ELT Practitioners எனும் தலைப்பில் பேராசிரியர் கலாநிதி ஏ.எம்.எம். நவாஸ், கருத்துக்களை முன்வைத்தத்துடன் பங்குபற்றுனர்களுடனான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன. இரண்டாம் சுற்றில் பேராசிரியர் சஹீட் அப்ராருள் ஹசனின் தலைமையில் Re conceptualizing effective Assessment எனும் தலைப்பில் உரையாடலும் கருத்துப்பரிமாற்றங்களும் இடம்பெற்றன.

நிகழ்வின் இறுதியில் இடம்பெற்ற சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எம்.எம். பாஸில் மற்றும் பதில் உபவேந்தர் கலாநிதி யூ.எல். அப்துல் மஜீட் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றியதுடன் பங்குகொண்டவர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கி வைத்தனர்.

நிகழ்வின்போது சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஏ.எம். சமீம் மற்றும் விரிவுரையாளர் இசட். ஹூருல் பிர்தௌஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.















 


























இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :