ஜனாதிபதி ரணிலை ஆதரித்து சாய்ந்தமருதில் இளைஞர் ஒன்றுகூடல்



அஸ்லம் எஸ்.மௌலானா-
னாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இளைஞர் ஒன்றுகூடல் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (10) இரவு சாய்ந்தமருதில் அமைந்துள்ள ஜனாதிபதியின் கல்முனைத் தொகுதி ஒருங்கிணைப்பு காரியாலயத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதியின் கல்முனைத் தொகுதிக்கான அதிகாரமளிக்கப்பட்ட முகவரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் குழுத் தலைவருமான கலாநிதி ஏ.எம். ஜெமீல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப், கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் முன்னாள் அதிபர் ஐ.எல்.ஏ. மஜீட், விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.எம்.றிபாஸ், சமூக செயற்பாட்டாளர் அஸ்வர் சலாம் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக கல்முனைத் தொகுதியில் முன்னெடுக்கப்படும் பிரசார நடவடிக்கைகளை இளைஞர்களின் பங்களிப்புடன் மேலும் விஸ்தரித்து காத்திரமாக முன்னெடுப்பது குறித்து வலியுறுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் பிரதித் தவிசாளர் ஏ.எம். ஜாஹிர், பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் எம்.பஸ்மீர், ஐ.தே.க. வட்டார அமைப்பாளர்கள், கட்சிப் பிரமுகர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பெருந்திரளான இளைஞர்கள் பங்கேற்றிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :