கல்முனை அல் -பஹ்ரியா மாணவர்கள் வரலாற்று சாதனை : மாகாணத்தில் பிரகாசித்த கல்முனை வீரர்கள் !



நூருல் ஹுதா உமர்-
ல்முனை கல்வி வலய கல்முனை கமு/கமு/ அல் பஹ்ரியா மகா வித்தியாலய மாணவர்கள் நடந்து முடிந்த கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் 5 தங்கம் 5 வெள்ளி பதக்கம் பெற்று மாகாண மட்ட போட்டியில் சாதனை படைத்துள்ளனர்.
இதில் 3 போட்டியில் மாகாணமட்ட புதிய சாதனை படைத்துள்ளதுடன் ஆண்களுக்கான அஞ்சலோட்டப் போட்டியில் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த பாடசாலை மாகாண மட்டத்தில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளமை சிறப்பம்சமாகும்.

இவ் வெற்றிக்காக உறுதுணையாய் இருந்த மாணவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து ஆலோசனை, வழிகாட்டல்களையும் வழங்கி ஊக்கப்படுத்திய கல்லூரி முதல்வர் எம்.ஏ.ஸலாம் அவர்களுக்கும் மற்றும் பிரதி, உதவி அதிபர்கள், மாணவர்களை வழிநடத்தி பயிற்சிகளை வழங்கிய பாடசாலை உடற்கல்வி ஆசிரியர் யூ.எல். ஷிபான் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களான எம்.ஏ.எம். ரியால், ஏ.டபலியு. எம். ஆசாத் கான் ஆகியோருக்கும் போட்டியில் பங்கேற்று தனது உச்ச திறமைகளை வெளிக்காட்டி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதாகவும் போட்டிகளில் பங்கேற்க தேவையான உதவிகளை மேற்கொண்ட பாடசாலை நிர்வாகம், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு, பழைய மாணவர்கள் மற்றும் ஏனைய நலன் விரும்பிகளுக்கும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்வதாக பாடசாலை சமூகம் தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :