கொக்கட்டிச்சோலையில் பாரம்பரிய சம்பிரதாய முறைப்படி நடைபெற்ற ஏர்பூட்டு விழா!



வி.ரி.சகாதேவராஜா-
ரலாற்று பிரசித்தி பெற்ற கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய ஏர் பூட்டு விழா இன்று (24) செவ்வாய்க்கிழமை விழாக்குழுத் தலைவர் க.சிவகுருநாதன் தலைமையில் பாரம்பரிய சம்பிரதாய முறைப்படி கோலாகலமாக நடைபெற்றது.

ஆலய பிரதம குரு சிவஸ்ரீ மு கு. சச்சிதானந்த குருக்கள், ஆலய குரு சிவஸ்ரீ வ. ஜோதிலிங்க குருக்கள் ஆசியோடு நிகழ்வு ஆலய காணியில் ஆரம்பமானது.

நிகழ்வில் அதிதிகளாக மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், பட்டிப்பளை பிரதேச இந்து ஆலயங்களின் ஒன்றியத் தலைவர் கலாபூஷணம் ஞானபேரின்பம் ஆகியோர் கலந்து கொண்டார்கள் .

ஆலய பரிபாலன சபையின் வண்ணக்கர்களான இ. மேகராசா( தலைவர் ), சி.கங்காதரன்( செயலாளர் ),ச. கோகுலகிருஷ்ணன் ( பொருளாளர்) ஆகியோர் ஏர் பூட்டு விழாவை சம்பிரதாய முறைப்படி ஆரம்பித்து வைத்தார்கள்.

நிகழ்வில் பட்டிப்பளை பிரதேச முன்னாள் தவிசாளர் அதிபர் சிவ.அகிலேஸ்வரன் உள்ளிட்ட பிரமுகர்களும் விவசாயப்பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :