அநுர குமார திசாநாயக்கவை ஆதரித்து சாய்ந்தமருதில் மாபெரும் பிரசாரக் கூட்டம்



எம்.எஸ்.எம்.ஸாகிர்-
டைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவை ஆதரித்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கல்முனை தொகுதியின் வெற்றிக்கான மாபெரும் தேர்தல் பிரசார கூட்டம் (13) நாளை வெள்ளிக்கிழமை மாலை 06 மணிக்கு சாய்ந்தமருது மருதூர் சதுக்கத்தில் நடைபெறவுள்ளது.

"வளமான நாடு அழகான வாழ்க்கை" எனும் தொனிப்பொருளில், அநுர குமார திசாநாயக்கவின் கல்முனை தேர்தல் தொகுதி இணைப்பாளரும் தேசிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட செயற்குழு உறுப்பினருமான ஏ. ஆதம்பாவாவின் தலைமையில் இடம்பெறும் இம்மாபெரும் விழாவில், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளார்.

கௌரவ மற்றும் விசேட அதிதிகளாக கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொள்வர்.

இந்நிகழ்வில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டு குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :