நாவிதன்வெளி பிரதேசத்தில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் துறவற தின நூற்றாண்டு விழாத் தொடர் நிகழ்வு



வி.ரி.சகாதேவராஜா-
ம்மாந்துறை வலயத்துக்குட்பட்ட நாவிதன்வெளி பிரதேசத்தில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் துறவற தின நூற்றாண்டு விழாத் தொடர் நிகழ்வு நடைபெற்று வருகிறது.

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைகளமும், காரைதீவு சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த பணிமன்றமும் இணைந்து நடாத்திய முதல் நிகழ்வு நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலயத்தில் கல்லூரியின் பிரதிஅதிபர் திருமதி சூரியகுமார் பிரசாந்தினி தலைமையில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் பாடசாலையின் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டதுடன் நாவிதன்வெளி பிரதேச செயலக இந்து கலாசார உத்தியோகத்தர் கு. நீலோந்திரன், திணைக்கள வளவாளர் நா. சனாதனன் ஆகியோர் கலந்து கொண்டதுடன் பாடசாலைகளுக்கான சுவாமியின் திருவுருவப்படங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் சார்பில் மாவட்ட செயலக இந்து கலாசார உத்தியோகத்தர் திரு கு. ஜெயராஜி ஏற்பாடுகளை மேற்கொண்டார்.



















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :