ஸ்ரீ முருகனில் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் துறவற தின நூற்றாண்டு விழா



வி.ரி. சகாதேவராஜா-
சுவாமி விபுலாநந்த அடிகளாரின் துறவற தின நூற்றாண்டு விழா நேற்று நாவிதன்வெளி மத்திய முகாம் ஸ்ரீ முருகன் தமிழ் மகா வித்தியாலயத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்துசமயகலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ய. அநிருத்தனின் வழிகாட்டலின் கீழ் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைகளமும், சுவாமி விபுலாநந்த ஞாபகார்த்த பணிமன்றமும் இணைந்து மத்திய முகாம் ஸ்ரீ முருகன் தமிழ் மகா வித்தியாலயத்தில்
இவ் விழாவை நடாத்தியது.

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் துறவற தின நூற்றாண்டு விழா பாடசாலையின் அதிபர் எஸ்.திருச்செல்வம் தலைமையில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் சைவப் புலவர் வளவாளர் ஜோ.கஜேந்திரா, வளவாளர் நா.சனாதனன், பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர் .
சுவாமியின் திருவுருவப்படங்களை மாணவர்களுக்கு வழங்கினர்.

ஏற்பாடுகளை இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் சார்பில் மாவட்ட செயலக இந்து கலாசார உத்தியோகத்தர் கு. ஜெயராஜி மேற்கொண்டார். இது பதினைந்தாவது பாடசாலை நிகழ்ச்சி திட்டமாகும்.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :