கல்முனை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் ஆயத்த முன்னேற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடல்




எஸ்.எம்.எம்.றம்ஸான்-
னாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து கல்முனை தொகுதிக்கான பிரச்சாரக்கூட்டம் எதிர்வரும் 14 ஆம் திகதி சாய்ந்தமருது பௌசி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இப்பிரச்சாரக் கூட்டம் தொடர்பாகவும் கல்முனை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் ஆயத்த முன்னேற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடல் சாய்ந்தமருதில் ஸீ பிரீஸ் ஹோட்டலில் நடைபெற்றது.

முன்னாள் இராஜங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய கொள்கைப்பரப்பு செயலாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான கே.ஏ. அப்துல் ரஸாக் (ஜவாத்), ஐக்கிய மக்கள் சக்தி கல்முனை தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி எம்.எஸ்.எம். ரஸாக், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொருளாளரும், கல்முனை மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தேசிய அமைப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெப்பை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும், கல்முனை மாநகர சபை முன்னாள் முதல்வருமான சட்டத்தரணி ஏ.எம். றக்கீப், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளர் ரிஸ்லி முஸ்தபா ஆகியோர் கலந்து கொண்டனர்

மேலும், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர்கள், கல்முனை தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிகளின் அதியுயர் பீட உறுப்பினர்கள், ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பாளர்கள், பிரமுகர்கள், மாவட்டகுழுக்களின் தலைவர்கள், செயலாளர்கள், நிர்வாகிகள், பிரதேச அமைப்பாளர்கள் மற்றும் கட்சி முக்கியஸ்தகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது ஜனாதிபதி தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் வெற்றிகரமாக நடைபெற தேவையான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :