சஜித்தின் வெற்றியை உறுதிப்படுத்த சாய்ந்தமருதில் இணைப்புக் காரியாலயம்!



திர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவுடன் போட்டியிடும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக மக்களை இணைத்துக்கொண்டு செயற்படுவதற்காக இணைப்புக்காரியாலயம் ஒன்றை சாய்ந்தமருது 18 ஆம் வட்டாரத்தில் அங்குராப்பணம் செய்துவைக்கும் நிகழ்வு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் பிரதி பொருளாளருமான அல் ஹாஜ் ஏ.சி. யஹ்யாகான் தலைமையில் 2024.09.13 ஆம் திகதி இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு அதிதிகளாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சாய்ந்தமருது அமைப்பாளர் எம்.ஐ.எம். பிர்தௌஸ் கல்முனை மாநகரசபையின் முன்னாள் பிரதி முதல்வர் ஏ.ஏ. பாசீர் மற்றும் உயர்பீட உறுப்பினர் ஏ. ஜலால்டீன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.

காரியாலயத்தை திறந்து வைத்து உரையாற்றிய அல் ஹாஜ் ஏ.சி. யஹ்யாகான், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தீர்மானத்துக்கு அமைவாக ஜனாதிபதி தேர்தலின் வெற்றி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக தாங்கள் நாடளாவிய ரீதியில் பிரச்சாரங்களை முன்னெடுத்துள்ளோம் என்றும் சஜித்தின் வெற்றி என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று என்றும் குறித்த வெற்றியின் பங்காளிகளாக அனைவரையும் இணைந்து கொள்ளுமாறு அறைகூவல் விடுத்தார்.

சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக சாய்ந்தமருதில் சில இணைப்பு அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றுடான் இணைந்து இந்த காரியாலயமும் செயற்படும் என்றும் தெரிவித்தார்.

நிகழ்வின்போது கட்சியின் போராளிகள் பலரும் பங்கு கொண்டிருந்தனர்.














 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :