தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடாத ஊழியர்களுக்காக வழங்கப்படும் என்று கூறிய பத்தாயிரம் ரூபாயையேனும் வழங்கவில்லை!-சஜித்



அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து அரட்டை அடிக்கின்ற அரசாங்கம், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடாத ஊழியர்களுக்காக வழங்கப்படும் என்று கூறிய பத்தாயிரம் ரூபாயையேனும் வழங்க முடியாமல் இருக்கின்றது.

ம்பள அதிகரிப்பு கோரி பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட அரச ஊழியர்களுக்காக பத்தாயிரம் ரூபா அதிகரித்து கொடுக்கப்படும் என்று கூறிய போதும் அதனை இன்னும் வழங்கவில்லை. பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடாதவர்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றாத அரசாங்கம் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்போம் என பொய் சொல்வதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடாதவர்களுக்கு வழங்கப்படும் என குறிப்பிட்ட தொகையை வழங்குமாறும், அவ்வாறு வழங்க முடியாவிட்டால் தற்போதைய அரசாங்கம் அரச சேவையில் உள்ளவர்களுக்கு எதிர்காலத்தில் சம்பள அதிகரிப்பை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் இன்று (04) தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :