அம்பாறை மாவட்டத்தில் பொதுச் சின்னத்தில் போட்டியிட இலங்கை தமிழரசுக்கட்சி தயார் ! காரைதீவு கிளைக்கூட்டத்தில் தீர்மானம்



வி.ரி.சகாதேவராஜா-
லங்கை தமிழரசுக் கட்சியானது இம்முறை பாராளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் எங்களுடைய பிரதிநிதித்துவத்தை பெறுவதற்காக பொதுச் சின்னத்தில் போட்டியிடுவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் கட்சியின் காரைதீவுக்கிளை கூட்டமானது பிரதேசக்கிளைத் தலைவர் முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் நடைபெற்றபோது மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில் கட்சிக்கிளையின் தலைவர் செயலாளர் பொருளாளர் ஒவ்வொரு வட்டார பிரதிநிதிகள் வட்டார அங்கத்தவர்கள் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் என பல கலந்து கொண்டிருந்தார்கள்.

ஏக மனதாக இம்முறை தேர்தலிலே அம்பாறை மாவட்டத்தில் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற ஒரு பொதுச் சின்னத்தில் போட்டியிட வேண்டுமென்று அம்பாறை பொதுமக்களினால் சமூக வலைதளங்களிலும் புத்திதீஜீவிகளையும் கலந்துரையாடி வருவதை வருவதை அவதானித்து வருகிறோம்.

நாமும் அதற்காக தயாராக இருக்கின்றோம்.

அதேவேளை அதன் போது ஏனைய கட்சிகள் அம்பாறை மாவட்டத்தில் பிரதிநிதித்துவத்தை எடுப்பதற்காக போட்டியிடுமாக இருந்தால் இலங்கை தமிழரசுக்கட்சி சார்பாக நாங்களும் போட்டியிட நேரிடும் என்பதையும் அம்பாறை மாவட்ட பொதுச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று கருத்து கூறுகின்ற புத்திஜீவிகளுக்கு பகிரங்கமாக இன்றைய ஏகமனதான முடிவை அறிவிக்கின்றோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :