தீர்த்தக்குளத்தில் தீர்த்தம் ஆடினார் தான் தோன்றீஸ்வரர்!



வி.ரி.சகாதேவராஜா-
ரலாற்றுப் பிரசித்தி பெற்ற கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த தீர்த்தோற்ஷவம் நேற்று காலை பெற்றது.

ஆலயத்தில் காலை 6 மணி அளவில் திருப்பொற்சின்னம் இடித்து பிரதம குரு சிவஸ்ரீ மு கு. சச்சிதானந்த குருக்கள் ஆலய குரு சிவசிரி சபாரெத்தினக்குருக்கள் கிரியைகளின் பின்னர் ஏழு முப்பது மணி அளவில் ஊர்வலமாக தீர்த்தக்குளத்துக்கு சென்றனர்.
ஆலயத்திலிருந்து ஒரு கிலோ மீற்றருக்கு அப்பால் உள்ள "சாமிரவில்லு" என அழைக்கப்படும் தீர்த்தக் குளத்தில் காலை 8 மணி அளவில் சிவன் உறை சிவகாமி விசேட பந்தலில் அபிஷேகம் செய்யப்பட்டு தீர்த்தமாடினர்.

அதை தொடர்ந்து பெருந்திரளான பக்தர்கள் தீர்த்தம் ஆடினார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :