தென்கிழக்கு பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீடத்துக்கு புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு!



லங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீடத்துக்கு 2022/2023 ஆம் கல்வியாண்டுக்கு புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு பீடத்தின் சிரேஷ்ட உதவி பதிவாளர் எம்.எஸ். உமர் பாறூக் தலைமையில் தொழில்நுட்பவியல் பீட கேட்போர் கூடத்தில் 2024.09.30 ஆம் திகதி இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பதில் உபவேந்தரும் தொழில்நுட்பவிய பீடத்தின் பீடாதிபதியுமான கலாநிதி யூ.எல். அப்துல் மஜீட் கலந்து கொண்டு உரையாற்றினார்.

நிகழ்வில் அறிமுக உரைகளை உயிரியல் அமைப்பு தொழில்நுட்பவியல் துறையின் தலைவர் கலாநிதி எம்.எம்.எம். முனீப் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பவியல் துறையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் ஆர்.கே.ஏ. றிபாய் காரியப்பர் ஆகியோர் ஆற்றினர்.

தென்கிழக்கு பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீடத்துக்கு 2022/2023 ஆம் கல்வி ஆண்டுக்கு, 200 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

நிகழ்வின் இணைப்பாளர் விரிவுரையாளர் எம்.வி. பாத்திமா ஜெம்சியாவின் வழிகாட்டலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் ஏ.எம்.எம். முஸ்தபா பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர்,பல்கலைக்கழக திணைக்களங்களின் தலைவர்கள்  மற்றும் விரிவுரையாளர்கள் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் குறித்த நிகழ்வில் தொழில்நுட்பவியல் பீடம் கடந்துவந்த பாதை என்ற விவரண காட்சிகளும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.





















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :