கல்வி அமைச்சின் அகில இலங்கை தேசிய மட்ட போட்டியில் கல்முனை ஸாஹிரா கல்லூரி வரலாற்று சாதனை வெற்றி



நூருல் ஹுதா உமர்-
ல்வி அமைச்சினால் முதன் முதலாக ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்ற அகில இலங்கை தேசிய மட்ட இஸ்லாமிய கலாச்சாரப் போட்டி கடந்த சனி மற்றும் ஞாயிறு தினங்களில் (07,08/09/2024) கொழும்பு சாஹிரா கல்லூரியில் நடைபெற்றது. வலய மட்டம், மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்ற கல்முனை ஸாஹிரா கல்லூரி கலிகம்பு கலை அணியினர் அகில இலங்கை தேசிய மட்ட போட்டியிலும் கலந்து கொண்டு மூன்றாம் இடத்தைப் பெற்று saaதனையை புரிந்துள்ளனர்.

இவ் வரலாற்று வெற்றியை பெற்றுத் தந்த மாணவர்களுக்கும் மாணவர்களை பயிற்றுவித்து அழைத்துச்சென்ற கல்லூரியின் விளையாட்டு துறை பொறுப்பாசிரியர் எம்.ஐ.எம்.அமீர் , எம்.வை.எம்.றகீப் அவர்களுக்கும் பயிற்சி வழங்கிய எம்.பைஸர் அவர்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, இவ் வெற்றிக்காக உறுதுணையாய் இருந்த மாணவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து ஆலோசனை, வழிகாட்டல்களையும் வழங்கி ஊக்கப்படுத்திய கல்லூரி முதல்வர் எம்.ஐ.ஜாபிர் அவர்களுக்கும் மற்றும் பிரதி, உதவி அதிபர்கள், போட்டிகளில் பங்கேற்க தேவையான உதவிகளை மேற்கொண்ட பாடசாலை நிர்வாகம், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு மற்றும் பழைய மாணவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :