கல்முனை சாஹிரா மாணவன் மாகாண மெய்வல்லுனர் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்று சாதனை



அஸ்லம் எஸ்.மெளலானா-
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் போட்டியின் 14 வயது ஆண்கள் பிரிவில் 60 மீட்டர் ஓட்டப் போட்டி நிகழ்ச்சியில் கல்முனை சாஹிராக் கல்லூரி மாணவன் ஏ.ஆர்.எம். றிஹாப் முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.

இப்போட்டி மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (08) நடைபெற்றது.

மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்றுக் கொண்டதன் மூலம் தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவாகி கல்லூரிக்கு பெருமையை ஈட்டிக் கொடுத்துள்ள இம்மாணவனுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டையும் தெரிவித்துள்ள பாடசாலை சமூகம், இவ்வெற்றிக்கு உறுதுனையாய் இருந்து ஆலோசனை, வழிகாட்டல்களை வழங்கி ஊக்கப்படுத்திய கல்லூரி முதல்வர் எம்.ஐ. ஜாபிர் மற்றும் பயிற்சிகளை வழங்கிய பாடசாலை உடற்கல்வி ஆசிரியர் ஏ.எம். அப்ராஜ் றிழா, விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் எம்.யூ.ஏ. சம்லி ஆகியோருக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :