மாலைதீவு வில்லா கொலீஜ் மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கிடையே உடன்பாடு!



தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கும் மாலைதீவு வில்லா கொலீஜூக்குமிடையே கல்வி மற்றும் வளங்களை பரிமாற்றம் செய்து மாணவர்களுக்கு மிகச்சிறந்த கல்வியை வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் 2024.09.06 ஆம் திகதி தென்கிழக்கு பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சார்பில் நிகழ்வின் இணைப்பாளர் கலாநிதி ஏ.டப்ளியு. என். நளீபாவின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பதில் உபவேந்தர் கலாநிதி யூ.எல் அப்துல் மஜீத் கலந்து கொண்டிருந்தார். அதேவேளை மாலைதீவு வில்லா கொலீஜின் சார்பில் பதில் உபவேந்தர் பங்கு கொண்டிருந்தார்.

இங்கு இரு நிறுவனங்களுக்குமிடையே பரிமாறிக்கொள்ளக் கூடிய கல்வி, வளம் மற்று ஆய்வு நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

“மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கும் திட்டத்தை மேலும் மெருகூட்டும் விதத்தில் தென்கிழக்கு பல்கலைக்கழகம் பல்வேறு நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களுடனும் உயர் கல்வி நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தைகளை நடாத்தி ஒப்பந்தங்களை செய்து கொண்டு கல்வி மற்றும் வள பரிமாற்றங்களை செய்து வருகின்றது”

பொதுநிர்வாக அமைச்சின் உயர் அதிகாரிகளில் ஒருவரான ரஷாத் அஹமதின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பதில் பதிவாளர், பதில் நிதியாளர் மற்றும் பேராசிரியர் கலாநிதி ஏ.எல்.எம்.றியால், பேராசிரியர் கலாநிதி ஐ.எல்.எம்.மாஹிர், பேராசிரியர் கலாநிதி கே. கணேசராஜா கலாநிதி எம்.எம்.பெரோஸ் உள்ளிட்ட பலர் பங்கு கொண்டிருந்தனர்.










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :