எட்டு ஜனாதிபதிகளும் தமிழர்களை ஏமாற்றியதே வரலாறு? திராய்க்கேணியில் ஜெயசிறில் காட்டம்



வி.ரி.சகாதேவராஜா-
டந்த எட்டு ஜனாதிபதிகளுக்கு வாக்கு போட்டு தமிழர்கள் கண்ட பலன் என்ன?எட்டு ஜனாதிபதிகளும் தமிழ் மக்களை ஏமாற்றினார்கள்.

இவ்வாறு திராய்க்கேணியில் நேற்று மாலை இடம் பெற்ற பொது வேட்பாளர் அரியத்தை ஆதரிக்கும் பொதுக் கூட்டத்தில் பேசிய தாயக செயலணியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்..

பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திக்கப்பட்டன. பல உறுதிமொழிகள் அளிக்கப்பட்டன. ஆனால் அத்தனையும் கிழித்தெறியப்பட்டு ஏமாற்றப்பட்டதே வரலாறு . தமிழர்கள் வாழ்கின்ற பகுதிகளில் புத்தர் சிலைகளை அமைத்து நில ஆக்கிரமிப்பு செய்கிறார்கள்.அந்த வகையில் சிங்கள ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு வாக்கு போடத்தான் வேண்டுமா? சற்று சிந்தியுங்கள். இம்முறையாவது சர்வதேசத்திற்கு எமது ஒற்றுமையை வெளிக்காட்டுமுகமாக சங்குக்கு வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகின்றேன் .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :