இன்றைய சிறுவர்களே நாளைய தலைவர்கள் கல்முனை மாநகர முன்னாள் முதல்வரின் சிறுவர் தின வாழ்த்துச் செய்தி



சிறுவர்களை நாளைய சொத்துக்களாக கருதி அவர்களது உரிமைகளை பாதுகாப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றினைந்து செயற்பட வேண்டுமென கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் கலாநிதி. சிராஸ் மீராசாஹிப் தெரிவித்துள்ளார்.

உலகளாவிய ரீதியில் 1979 முதல் ஓக்டோபர் மாதம் 01ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையால் பிரகடனப்படுத்தப்பட்டு வருடம் தோரும் சிறுவர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

எனவே சிறுவர்களது எதிர்காலம், மற்றும் அவர்களது உரிமைகளை வலியுறுத்துவது தொடர்பில் நாம் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.

ஒவ்வொரு பெற்றோரும், குடும்பத்தவர்களும்,பொதுமக்களும் சிறுவர்களது உரிமைகளை மதித்து பாதுகாக்கும் பட்சத்திலேயே சிறுவர்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழிக்க முடியும்

சிறுவர் துஸ்பிரயோகங்களும், சிறுவர் ஊழியர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே காணப்படுகின்றது.

முன்னாள் முதல்வர் அவர்கள் மேலும் குறிப்பிடுகையில்....

எமது நாட்டினை பொருத்தமட்டில் சிறுவர்கள் தொடர்பில் நாம் அதிகம் கவணம் செலுத்தத்த வேண்டியுள்ளது.

போர் முடிவுற்ற போது பாதிக்கப்பட்ட சிறுவர்கள் ஏராளம் உறவுகளை இழந்து பராமரிப்பற்று இருக்கும் அவர்கள் பொருளாதார சமூகப்பிறச்சினைகள் என பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இன்றைய சிறுவர்களே நாளைய தலைவர்கள் என்பதை கருத்திற் கொண்டு செயற்பட வேண்டும்.

சிறுவர்களைப் பாதுகாத்து அவர்களின் உரிமைகளை மதித்து அவர்களது எதிர்காலத்தை ஒளிமயமானதாக மாற்றுவது எமது நாட்டின் ஒவ்வொருவரதும் கடமையாகும் என முன்னாள் முதல்வர் தெரிவித்தார்.
\
கலாநிதி. சிராஸ் மீராசாஹிப்
கல்முனை மாநகர முன்னாள் முதல்வர்,
மெற்றோ பொலிட்டன் கல்லூரியின் தவிசாளர்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சர்வதேச விவகாரப் பணிப்பாளர்



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :