வாழைச்சேனை ஆயிஷா வித்தியாலயம் மாகாண மட்டப் போட்டியில் முதலிடம்


எச்.எம்.எம்.பர்ஸான்-

மாகாண மட்ட நீர் ரொக்கட் போட்டியில் வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயம் முதலிடம் பெற்றுள்ளதாக பாடசாலை அதிபர் என்.சஹாப்தீன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் தரம் 6 தொடக்கம் 9 வரை கல்வி கற்கும் மாணவர்களின் ஆக்கத்திறனை வளர்த்தல் மற்றும் விஞ்ஞான எண்ணக்கருக்களின் சிறந்த பிரயோகம் என்பவற்றை மேம்படுத்துவதை நோக்காக கொண்டு இந்த நீர் ரொக்கட் போட்டியை நடாத்தியது.

அந்தவகையில், ஞாயிற்றுக்கிழமை (20) வந்தாறுமூலை மத்திய கல்லூரி மைதானத்தில் மாகாண மட்ட நீர் ரொக்கட் தாயாரித்து செலுத்தும் போட்டி இடம்பெற்றது.

இதில், ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயம் மகளிர் பிரிவில் மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளது.

போட்டியில் கலந்து கொண்டு முதலிடம் பெற்ற மாணவிகளான எம்.ஏ.அய்மன் அத்தீயா, ஏ.எம்.அன்ஷிஹா ஆகிய மாணவிகளுக்கும் மாணவிகளை தயார்படுத்திய விஞ்ஞானப் பாட ஆசிரியை கே.ஆர்.எப்.இஷாராவுக்கும் அதிபர் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :