சுகாதார அமைச்சினால் புத்தாக்க சிந்தனை திறன் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட கல்முனை பிராந்திய ஆய்வுக்கூடம்



நூருல் ஹுதா உமர்-
சுகாதார அமைச்சினால் புத்தாக்க சிந்தனை திறன் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட கல்முனை பிராந்திய ஆய்வுக்கூடத்தின் வளங்கள் மற்றும் பரிசோதனைகளை மேலும் வலுப்படுத்துவதற்கான விசேட கலந்துரையாடல் 2024.10.05 ஆம் திகதி கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சகிலா இஸ்ஸதீன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது

கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.சீ.எம் மாஹிர் அவர்களின் ஒருங்கிணைப்புடன் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் கல்முனை பிராந்தியத்தில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரதேச வைத்திய அதிகாரிகள் ஆரம்ப சுகாதார பராமரிப்பு பிரிவின் பொறுப்பு வைத்தியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்

குறித்த கலந்துரையாடலின் போது பிராந்திய ஆய்வுக்கூடத்தின் பொறுப்பதிகாரி என் எம் இப்ஹாம் அவர்கள் விளக்கக் காட்சியுடன் கூடிய தரவுகளை முன் வைத்து பல விடயங்களையும் அதன் கட்டமைப்பு மற்றும் தொழிற்பாடுகளையும் விரிவாக தெளிவுபடுத்தியமையும் குறிப்பிடத்தக்கது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :