சுகாதார அமைச்சின் மீளாய்வு கூட்டத்தில் பங்கேற்ற கிழக்கு ஆளுநர்!



அபு அலா-
கிழக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு, சமூக சேவைகள், கிராமிய மின்சார அமைச்சின் மீளாய்வுக் கூட்டம் (01) சுகாதார அமைச்சில் இடம்பெற்றது.

அமைச்சின் பதில் செயலாளர் எந்திரி என்.சிவலிங்கம் தலைமையில் இடம்பெற்ற
இந்த மீளாய்வு கூட்டத்திற்கு கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர பங்கேற்று குறித்த சுகாதார, சுதேச மருத்துவ நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு, சமூக சேவைகள், கிராமிய மின்சார அமைச்சினால் இவ்வருடம் முன்னெடுக்கப்பட்ட மற்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற செயற்றிட்டங்கள் தொடர்பிலும், அமைச்சின் கீழுள்ள திணைக்களங்களினால் மேற்கொள்ளப்பட்ட மற்றும் மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார்.

அதுதொடர்பான விளக்கங்களை அமைச்சின் பதில் செயலாளர் எந்திரி என்.சிவலிங்கம் மற்றும் திணைக்கள தலைவர்கள் ஆகியோர் முன்வைத்தனர்.

இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்க, ஆளுநர் செயலக செயலாளர் எல்.பி.மதநாயக்க, பிரதிப் பிரதம செயலாளர் (நிதி) ஏ.எம்.எம்.றபிக், பிரதிப் பிரதம செயலாளர் (திட்டமிடல்) என்.தமிழ்ச்செல்வன், கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்தியர் எம்.ஏ.நபீல், சுகாதார அமைச்சின் நிருவாக உத்தியோகத்தர் றியாஸ் உள்ளிட்ட உயரதிகாரிகள் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :