ஆளுந் தரப்போ எதிர்தரப்போ எந்த தரப்பில் உறுப்பினராக இருந்தாலும் மக்கள் குறைகளை தீர்ப்பேன்.-மீண்டும் ஒரு முறை சந்தர்ப்பம் தாருங்கள் முன்னாள் எம்.பி தௌபீக்



ம் முறை தேர்தலில் வெற்றியீட்டி ஆளுந்தரப்பிலோ, எதிர் தரப்டிலோ பாராளுமன்ற உறுப்பினராகினால் மக்கள் குறைகளை தீர்த்து வைப்பேன். என்றும் மீண்டும் ஒரு முறை சந்தர்ப்பம் தாருங்கள் என ஐக்கிய மக்கள் கூட்டணியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.தௌபீக் தெரிவித்தார்.

கிண்ணியாவில் (27) உள்ள மத்திய காரியாலயத்தில் இடம் பெற்ற சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் தெரிவிக்கையில் கடந்த 2020ம் ஆண்டில் அமோக வெற்றிவாகை சூடிய நான், இம் முறை அதனை விட மூன்று மடங்கு களத்தில் இறங்கியுள்ளேன் .வீட்டுக்கு வீடு பிரச்சாரப் பணியில் திருகோணமலை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் திறம்பட கட்சி ஆதரவாளர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறேன் 24 வருட கால அரசியலில் சமூகத்துக்காக தன்னை அர்ப்பணம் செய்து பல அபிவிருத்திகளை குக் கிராமம் நகரம் என செய்து காட்டியுள்ளேன் இம் முறையும் பாராளுமன்றம் அனுப்ப வேண்டும் திருகோணமலை மாவட்டம் இரு ஆசனங்களை வெற்றி கொள்ளக்கூடிய வாய்ப்பு இருக்கிறது இதனால் ஆளுங்கட்சி அரசாங்க பிரதிநிதியாகவோ அல்லது எதிர் கட்சி பிரதி நிதியாகவோ எதுவாக இருந்தாலும் மக்கள் குறைகள் தீர்க்கப்பட்டு சேவைகள் இடம் பெறும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :