சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் டீ சேர்ட் அறிமுக நிகழ்வு



நூருல் ஹுதா உமர்-
சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவைக்கு முன்னாள் இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் நிதியிலிருந்து வழங்கி வைக்கப்பட்ட டீ சேர்ட் அறிமுக நிகழ்வு ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் தலைவர் அஸ்வர் அப்துல் சலாம் தலைமையில் (06) இடம்பெற்றது.

இந் நிகழ்வில் ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் ஆலோசகரும், சாய்ந்தமருது-மாளிகைக்காடு ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவருமான மௌலவி எம்.சலீம் (ஷர்கி), உப தலைவர்களான எம்.ரிபாஸ், எஸ்.எச்.எம் ஜிப்ரி, செயலாளர் யூ.கே காலிதீன், பொருளாளர் எஸ்.எம் நசீர், ஆலோசகர் எம்.நாசர் உட்பட ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

திகாமடுல்ல மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் ஜனாஸா நலன்புரி பேரவையின் பிரச்சினைகள்,குறை நிறைகளை ஆராய்ந்ததுடன், எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடினார்.

இதன்போது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் நிர்வாகிகள் பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களுக்கு எடுத்துரைத்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :