மனித உரிமைகள் தொடர்பிலான குறுகிய கால கற்கையை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!



தென்கிழக்கு பல்கலைக்கழக கலை கலாச்சார பீடத்தின் அரசியல் விஞ்ஞான துறை நடாத்திய மனித உரிமைகள் தொடர்பிலான குறுகிய கால கற்கையை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 2024.10.08 ஆம் திகதி பீடத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

கற்கைநெறியின் இணைப்பாளர் ரீ. எப். சாஜிதாவின் வழிகாட்டலில், நிகழ்வின் தலைமை அரசியல் விஞ்ஞான துறையின் தலைவர், கலாநிதி எம். அப்துல் ஜப்பார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் நிலைக் குழுவின் முன்னாள் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் பிரேமகுமார டி சில்வா விஷேட பேச்சாளராக கலந்து கொண்டு உரையாற்றினார்.

பதில் உபவேந்தர் கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத் நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய அதேவேளை கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எம்.எம். பாஸில், உலகளாவியரீதியில் மனித உரிமைகளுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் தொடர்பிலும் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் உரையாற்றினார். நிகழ்வின் இறுதியின் விரிவுரையாளர் வி. கமலசிறி நன்றியுரையாற்றினார்.

நிகழ்வின்போது முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், சிரேஷ்ட பேராசிரியர் எம்.ஐ.எம். கலீல், பேராசிரியர் எஸ்.எம். ஐயூப், பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர், பல்கலைக்கழக வேலைப்பகுதி பொறியலாளர் எம்.எஸ்.எம். பஸில், திணைக்களங்களின் தலைவர்கள், சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட விரிவுரையாளர்கள், சிரேஷ்ட உதவி பதிவாளர் எம்.ரீ. அஹமத் அஷ்ஹர், கல்விசாரா உத்தியோகத்தர்கள்மற்றும் சான்றிதழ்களை பெற்றோர் அவர்களது உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
























இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :