தமிழ்த்தேசியம் பேசுவோர் தமிழ்த் தேசியத்தை சிதைப்பவர்களாக மாறுகிறார்கள்! பொத்துவில் முன்னாள் தவிசாளர் பார்த்திபன் கவலை!



வி.ரி. சகாதேவராஜா-
சமகாலத்தில் தமிழ் தேசியம் பற்றி பேசுபவர்களே தமிழ் தேசியத்தை சிதைப்பவர்களாக இருக்கிறார்கள். அம்பாறை தமிழ் மக்களையிட்டு சற்றும் சிந்திக்காது இது கவலைக்குரியது.

என்று பொத்துவில் பிரதேச சபையின் இலங்கைத் தமிழரசுக் கட்சி முன்னாள் உபதவிசாளரும் தொழில் அதிபருமான பெருமாள் பார்த்தீபன் தெரிவித்தார் .

சமகால அம்பாறை அரசியல் சூழல் தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்.

இன்று தமிழ்த்தேசியம் அதல பாதாளத்துக்குள் போய்க்கொண்டிருக்கிறது . தலைமைகள் தமக்குள் வேறுபடுகின்றன.அம்பாறை மாவட்டத்தில் தமிழ்ப் பிரதிநிதித்துவம் இழக்கப்படுகின்ற ஆபத்து இருக்கின்றது.
மக்களுக்காக கட்சியே தவிர கட்சிக்காக மக்கள் அல்ல.
எனவே பழையவர்களை தவிர்த்து புது இரத்தம் பாய்ச்சப்பட வேண்டும். இன்றேல் மக்கள் பெரும்பான்மை கட்சி உடன் சேர்ந்து போக நேரிடும்.

கடந்த முறை செய்த தவறை இம்முறையும் செய்யக்கூடாது.
மக்கள் மனைநிலை வேறு அரசியல்வாதிகளின் மனநிலை வேறாக இருக்கின்றது.

எல்லோரும் சேர்ந்து தான் இதற்கு முடிவு கட்ட வேண்டும் .

சிலர் தேசிய பட்டியலுக்காக அம்பாறையை மைதானமாக பயன்படுத்துகின்றார்கள் . இவர்களெல்லாம் பிரிந்து இருந்து செயல்பட்டால் நாங்கள் வேலை செய்ய மாட்டோம் .
எமக்கான ஒரேயொரு பிரதிநிதித்துவம்.அதற்கு 100 பேர் போட்டி. தேசியம் பேசும் இவர்களால் தமிழ் தேசியம் பாதுகாக்கப்படாது. எனவே இந்த இறுதி நேரத்திலாவது ஒன்று படுமாறு அன்பாக அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :