சர்வதேச முதியோர் தினம் சாய்ந்தமருது ஜீ.எம்.எஸ்.எஸ் பாடசாலையில் அனுஷ்டிப்பு



எம்.எஸ்.எம்.ஸாகிர்-
சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் (GMMS) சர்வதேச முதியோர் தினம் அதிபர் எம்.ஐ.எம். இல்யாஸ் தலைமையில் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது.

நிகழ்வில் பாடசாலையின் பழைய மாணவியும் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற பெண்நீதிபதியுமான மைமுனா அஹமத், அவரது கணவர் அஹமத் மற்றும் ஜம்இய்யத்தில் உலமா சாய்ந்தமருது - மாளிகைக்காடு கிளையின் தலைவர் எம். எம். எம். சலீம் (ஷர்க்கி) ஆகியோரின் தன்னலமற்ற சேவையினைப் பாராட்டி, பாடசாலையின் அதிபர் எம்.ஐ.எம்.இல்யாஸ் மற்றும் ஆசிரியர் குழாத்தினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

இந் நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளரும் பாடசாலையின் அபிவிருத்தி சங்க செயலாளருமான எம்.ஐ.எம். றியாஸ் மற்றும் பாடசாலையின் ஆசிரிய ஆசிரியைகள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு கௌரவிக்கப்பட்ட ஆளுமைகளுக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :