காரைதீவு பிரதேச செயலாளராக அருணன் நியமனம்



வி.ரி. சகாதேவராஜா-
காரைதீவு பிரதேச செயலகத்தின் புதிய நிரந்தர பிரதேச செயலாளராக இலங்கை நிருவாக சேவை அதிகாரி ஜி .அருணன் நேற்று முன்தினம் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னர் பிரதேச செயலாளராக இருந்த சிவ.ஜெகராஜன் பதவி உயர்வு பெற்று மேலதிக மாவட்ட அரசாங்க அதிபராக அம்பாறை கச்சேரிக்கு சென்றதையடுத்து வெற்றிடம் ஏற்பட்டது.

அதன் பின்னர் இரு அதிகாரிகள் தற்காலிக பதில் பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தனர். தற்போது நிரந்தரமாக நியமிக்கப்பட்ட அருணன்
வாகரை பிரதேச செயலாளராகவிருந்து இடமாற்றம் பெற்று வந்தவர் .

அவர் முன்னதாக காரைதீவு கண்ணகி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூசையில்‌ கலந்து கொண்டு ஆசி பெற்றார்.

பிரதேச செயலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்று கையொப்பமிட்டார்.

பின்னர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற பிரதேச செயலக உத்தியோகத்தர்களுடனான விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :