ஊருக்கு எம்.பி என்றதெல்லாம் போதும். நல்லதொரு தந்தையை உருவாக்குங்கள் – எஸ்.எம்.சபீஸ்



மாளிகைக்காடு செய்தியாளர்-
ர்ஹூம் பெருந்தலைவர் எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்கள் ஒரு தலைவனாக எல்லா மக்களையும் தன் குழந்தைகளாக நினைத்து கடமை புரிந்தார். அவரின் மறைவிற்கு பின் சுயநலத்தை விதைத்து மக்களை திசை திருப்பி விட்டனர் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், அக்கரைப்பற்று அமைப்பாளருமான எஸ்.எம் சபீஸ் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட பல்வேறுபட்ட கிராமங்களில் மக்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடும் போதே இதனைத் தெரிவித்திருந்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,

நல்லதொரு தந்தை ஒரு பிள்ளை நுளம்பு கடியிலும், இன்னொரு பிள்ளை வெறும் தரையிலும் மற்றப் பிள்ளை குளிரூட்டப்பட்ட அறையிலும் படுத்து தூங்க இடமளிக்கமாட்டார். அப்படிப்பட்ட ஒரு தலைவன் எமக்குத் தேவை.

ஒருத்தன் நடுவீதியில் போதையில் நிதானம் இழந்து கிடந்ததைக் கண்டு அவனுக்கு நாம் வாக்களிப்போம் என்றால் அதுதான் ஊர்வாதம். நிச்சயமாக அவனால் நல்லதொரு சமுதாயத்தை உருவாக்கி விட முடியாது. தான் ஊரின் தலைமை பள்ளிவாசல் நிர்வாக தலைவராக இருந்த காலத்தில் போதைவஸ்துக்கு அடிமையானவர்களின் திருமணங்களை கூட இடைநிறுத்தி இருந்தமையை இங்கு நினைவூட்டுகிறேன் என்றார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :