நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகார சபையின் புதிய தலைவராக அசங்க அபேவர்தன!




கர குடியிருப்பு அபிவிருத்தி அதிகார சபையின் புதிய தலைவராக அசங்க அபேவர்தன தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.

கிராமிய, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தனது அமைச்சின் கீழ் உள்ள நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு ( Urbun Settlement Development Authority) புதிய தலைவரை நியமித்துள்ளார்.

அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் சந்தன பண்டாரவிடமிருந்து நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்ட புதிய தலைவர் அசங்க அபேவர்தன, தனது அலுவலகத்தில் தனது புதிய பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார்.

திருகோணமலை மாவட்ட ஆளுநராகவும், அம்பாறை மாவட்ட மேலதிக ஆளுநராகவும் கடமையாற்றிய அசங்க அபேவர்தன, அரச நிர்வாக சேவையில் வினைத்திறன்மிக்க அதிகாரியாக 30 வருடங்களுக்கு மேலாக பொது சேவைகளுக்காக தன்னை அர்ப்பணித்துள்ளார்.

நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் விஜயானந்த ஹேரத் மற்றும் அந்த நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவினரும் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.


ப்ரெட்ரிக் ரொட்ரிகே
கிராமிய, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு, நிர்மாணத்துறை அமைச்சரின் ஊடகச் செயலாளர்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :