ஸ்கை தமிழ். ஆளுமைகளுக்கு விருது வழங்கி கௌரவித்த மாபெரும் விழா!! இம்போர்ட் மிரருக்கு சிறந்த இணையத்தள ஊடகத்துக்கான விருது!!



ல்வேறு துறைகளிலும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வரும் தெரிவு செய்யப்பட்ட 100 இலங்கை ஆளுமைகள் மற்றும் நிறுவனங்களை கௌரவிக்கும் ஸ்கை தமிழ் விருது விழா, ஸ்கை தமிழ் மற்றும் துணிந்தெழு சஞ்சிகையின் ஸ்தாபகரும் பணிப்பாளருமான ஜே. எம். பாஸித் தலைமையில் 2024.10.19 ஆம் திகதி, சனிக்கிழமை, அம்பாறை மாவட்டம் ஒலுவிலில் அமைந்துள்ள தென்கிழக்கு பல்கலைக்கழக தொழில் நுட்பவியல் பீட கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

பிரபல ஊடக ஆளுமைகள் மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்ட இவ்விருது விழாவுக்கு பிரதம அதிதியாக இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் ஆலோசகர் புரவலர் ஹாஷிம் உமர் கலந்து சிறப்பித்தார்.

இந்நிகழ்வுக்கு கௌரவ அதிதிகளாக தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதில் உபவேந்தர் கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத் மற்றும் தினகரன், தினகரன் வாரமஞ்சரியின் பிரதம ஆசிரியர் தே. செந்தில் வேலவர் ஆகியோர் கலந்து கொடிருன்தனர்.

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எம்.எம். பாஸில் விஷேட பேச்சாளராக கலந்துகொண்டு உரையாற்றினார்.

முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூரின் புதல்வியும் ஏ.ஆர்.மன்சூர் பௌண்டேசனின் தலைவியும் அவுஸ்த்ரேலியா நாட்டின் பெண்கள் கவுன்சிலின் தலைவியும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான திருமதி மரியம் நளிமுத்தீன் நிகழ்வு தொடர்பான கருத்துக்களை முன்வைத்தார்.

இந்நிகழ்வின்போது விருதுகளை பெற்றவர்களின் பெயர்களில் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்பட்ட ஒருவருக்கு ஹாஷிம் உமர் பௌண்டேசன் சார்பில் அதன் ஸ்தாபகர் புரவலர் ஹாஷிம் உமர் மடிகணணி ஒன்றை வழங்கி வைத்தது விஷேட அம்சமாகும்.

நிகழ்வுக்கு பிரதான ஊடக அனுசரணையை தினகரன் மற்றும் தினகரன் வாரமஞ்சரி வழங்கியிருத்த அதேவேளை வேறு பல நிறுவனங்களும் இணை அனுசரணைகளை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

(இந்த நிகழ்வில் இம்போர்ட் மிரர் ஊடக வலையமைப்பு,கிழக்கின் சிறந்த இணையத்தள ஊடகத்துக்கான விருதைப் பெற்றுக்கொண்டது. நன்றி ஸ்கை தமிழ்)

























































இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :