பாலின அடிப்படை பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பது தொடர்பான செயலமர்வு



ஹஸ்பர் ஏ.எச்-
பெண்களுக்கு எதிரான பாலின வன்முறைகள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களை தடுக்கவும் அதனை அணுகுவது தொடர்பான செயலமர்வொன்று திருகோணமலையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் நேற்று(22) இடம்பெற்றது. இதனை திருகோணமலை மாவட்ட செயலக பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவு, ஈவின்ங்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. குறித்த செயலமர்வானது 08 பொலிஸ் பிரிவுகளை சேர்ந்த துறைசார் உத்தியோகத்தர்களுக்காக இடம்பெற்றது.
வளவாளராக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி கலந்துகொண்டு பெண்கள் பாலின அடிப்படை அது தொடர்பிலான சம்பவங்கள் நிகழாமை அதனை தடுக்க வேண்டிய அணுகுமுறைகள் உட்பட பல விடயங்களை தெளிவூட்டினார்.
இதில் திருகோணமலை மாவட்ட செயலக பெண்கள் விவகார மாவட்ட இணைப்பாளர் தீபானி உட்பட, பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.










எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :