அன்பின் பாதை எண்ணம்போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் மகுடம் வி.மைக்கல் கொலினின் "அன்பின் முத்தங்கள்" கவிதை நூல் அறிமுக விழா (22) திருகோணமலை ஸ்ரீ பத்திர காளியம்பாள் தேவஸ்தான மண்டபத்தில் இடம்பெற்றது.
அன்பின் பாதை எண்ணம்போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றத்தின் தலைவர் கனக.தீபகாந்தன் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவுக்கு முதன்மை விருந்தினராக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மேலதிக செயலாளர் க.மகேசன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேலும் சிறப்பு விருந்தினராக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் கே.குணநாதனும், கௌரவ விருந்தினராக கிழக்கு மாகாண கிராமிய கைத்தொழில் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் நா.மணிவண்ணனும், அழைப்பு விருந்தினராக ஊடகவியலாளர் திருமலை நவம் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
"அன்பின் முத்தங்கள்" நூலின் முதன்மை பிரதியை திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளியம்பாள் தேவஸ்தான பிரதம குருவும் ஆதீனகர்த்தாவுமான சிவஸ்ரீ சோ.ரவிச்சந்திர குருக்கள் பெற்றுக்கொண்டார்.
அடுத்த பிரதியை திருக்கோணேஸ்வர ஆலய பரிபாலன சபைத் தலைவரும் சட்டத்தரணியுமான திலகரத்தினம் துஷியந்தன் பெற்றுக் கொண்டார்.
அன்பின்பாதை எண்ணம்போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றம் பல இலக்கியவாதிகளையும், எழுத்தாளர்களையும் ஊக்குவிக்கும் நோக்கில் அவர்களின் நூல்களை அறிமுகம் செய்துவைத்து அவர்களின் எழுத்துத்திறனின் ஆர்வங்களை மேன்மேலும் தூண்டச் செய்து வருகின்றனர். இது அவர்களின் 30 வது நூல் அறிமுக விழா என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment